மட்டக்களப்பு வாகரையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது: 10 போத்தல் கசிப்பு மீட்பு !

kaithu

மட்டக்களப்பு வாகரை காவற்துறை பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் கைது செய்துள்ளதாக வாகரை காவற்துறையினர் தெரிவித்தனர்.


காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று காலை கதிரவெளியிலுள்ள வீடுஒன்றை காவற்துறையினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்ட போதே கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 10 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.


இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.