2016-2018 கல்வியாண்டில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கைநெறியை மேற்கொண்ட டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் நாளை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மொஹம்மட் பஸால் தெரிவித்துள்ளார்.
நியமனம் பெறவுள்ள ஆசிரியர்கள் தமது பாடசாலை தொடர்பான விபரங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் www.ep.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
பாடசாலைகளில் தமது கடமையை நாளை பொறுப்பேற்கலாம் என்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.