வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மாத்தளை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.