விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

kaithu

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

13 பெண்களும் 41 ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 2,605 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.