இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருடன் தொடர்புடைய பத்து ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.