நபரொருவரிடமிருந்து 25,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட லுனுகம்வெஹேர-64 சிங்கபுர கிராம உத்தியோகத்தர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் பத்மினி வீரசூாிய தொிவித்துள்ளார்.