சுகாதார விதிமுறைகளை மீறிய 31 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் 2 ஆயிரத்து 500 நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர்கள் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.