பெண் தலைமைத்துவ குடுப்பங்களிற்கு விஷேட திட்டம்

daglas 0
daglas 0

பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்திட்டமானது முன்னோடி திட்டமதாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

100 பேர் கொண்ட ஒரு அணியை உருவாக்கி அவர்களுள் சுயதொழில்களில் பரீட்சியம் உள்ளவர்கள் அல்லது அதை முன்னெடுக்க விரும்புபவர்களை தெரிவு செய்து அவர்கள் விரும்பும் துறைக்கு அத்துறை சார் பயிற்சிகள் வழங்ப்படவுள்ளது.

குறித்த பயிற்சியின் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் அத்தொழிலை முன்னெடுத்து செல்ல விரும்பினால் அவர்களுக்கு முதற் கட்டமாக மிகக் குறைந்த வட்டி வீதத்தில் (100,000) ஒருலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் அத்தொழிலை அவர்கள் சரியா முன்னெடுத்துச் சென்று அந்த கடனை மீள செலுத்தியிருப்பின் அடுத்த கட்டமாக அவர்களுக்கு இரண்டரை இலட்சம் (250,000) வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையையும் அவர்கள் சரியாக முன்னெடுத்து சென்றால் மூன்றாம் கட்டமாக அவர்களுக்கு அத்தொழிலை விரிவாக மேற்கொள்ள (500,000) ஐந்து இலட்சம் ரூபா குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.