கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் 100 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சிஆர் பரிசோதனைகளின் போதே குறித்த 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.