மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா

unnamed 1 3
unnamed 1 3

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் காணிப் பதிவகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

காணிப் பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் இன்று (20) கடமைக்காக அலுவலகத்துக்கு வரும் வளியில் வீதி விபத்தில் சிக்கியிருந்தால். இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட காணிப் பதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணிப் பதிவகத்தின் சேவைகளைப் பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள் மறு அறிவித்தல் வரை சேவைகளைப் பெறமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.