ரஞ்சனுக்கு நீதி வேண்டி சபையில் கறுப்புச் சால்வை அணிந்த ஹரீன்!

ranjan harin 1
ranjan harin 1

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காகக் கறுப்புச் சால்வையை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக இன்று அறிவித்த ஹரின் பெர்னாண்டோ, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் சபை அமர்வுகளில் இந்தச் சால்வையுடனேயே கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குடும்ப அதிகாரத்தைக் காட்டுவதற்காகச் சிலர் அணிந்திருக்கும் சால்வையைப் போன்றது அல்ல எனவும், நீதிக்காக அணியும் சால்வையே எனவும் இதன்போது ஹரீன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் உண்மைகளைப் பேசியதால் அவர் மீதான அச்சத்திலேயே அவரைச் சிறைக்குள் தள்ளியுள்ளனர் எனவும் ஹரீன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.