கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள நூல்வெளியீட்டு விழா

140165054 3287164618055241 1187532779065143785 o
140165054 3287164618055241 1187532779065143785 o

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி மக்கள் சிந்தனைக் களத்தின் சிறப்பு கருத்தரங்கும், நூல் வெளியீடும், மதிப்பளிப்பும் இடம்பெற இருக்கின்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி எஸ். சிவகுமார் அவர்களின் வடக்கின் நீர் ஆதாரமும் பங்கிட்டு கொள்கையும் அதன் பயன்பாட்டு உத்திகளும் என்ற நூல்வெளியீடும், சிறப்பு கருத்தரங்கும் இடம்பெற உள்ளன.

குறித்த நூலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி வெளியீட்டு வைக்கவுள்ளார்.

குறித்த நிகழ்வுக்கு பொதுமக்கள், சமூக நலன்விரும்பிகள் வருகை தருமாறு மக்கள் சிந்தனை களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.