மன்னாரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியாவில் தகனம்

IMG 20210121 124413
IMG 20210121 124413

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்தார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.