சட்டவிரோதமாக 43 கிலோ மஞ்சள் வைத்திருந்த மூவர் கைது

kaithu

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 43 கிலோகிராம் மஞ்சளை வைத்திருந்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட் 37, 25 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

யாழ்ப்பாண நீதிமன்றில் நேற்று மூவரும் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.