ஈரிஐ சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான நாலக, ஜீவக மற்றும் ஹேமல் எதிரிசிங்க ஆகியோர் தாக்கல் செய்த முன் பிணை விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அவை பரிசீலிக்கப்படவுள்ளன.
கொழும்பு பிரதம நீதிவான் மொஹமட் மிஹார் குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்றைய தினம் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
இதேவேளை ஈரிஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த முன் பிணை மனுவில் ஒரு பிழை இருந்ததால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.