சுகாதார அமைச்சை சேர்ந்த 11 பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 70 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 100 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனை தெரிவித்துள்ளார்.