வட மேல் மாகாண சபையின் கட்டிடத்துக்கு அருகாமையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தினை புறக்கணித்துள்ள ஆளுநர் முஸம்மில் ஆளுநர் அலுவலகத்தினை இடமாற்றம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர் அலுவலகத்தினை இடமாற்றம் செய்வதன் மூலமாக ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், பாரிய நிதி வீண்விரயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் ஒருவராகவுள்ள முஸம்மிலின் ஆளுநர் நியமனம் தொடர்பில் பிக்குகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் காரியாலயத்தை மாற்றுவதற்கு ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் மற்றுமொரு பிரச்சினையை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.