கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்து சேவையின் கீழ் பயணிப்போர் நலன் கருதி விசேட போக்குவரத்து இணைப்புச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்து சேவையில் வருகை தருவோர், சுமார் அரை மைல் தூரத்திற்கு அதிகமாக பிரதேசத்தை நடந்தே செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையை சீர் செய்யும் வகையிலேயே அத்தூரத்தைக் கடக்க கடந்த வியாழன் முதல் இச்சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.
பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்த இணைப்புச் சேவை இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.