மாவீரர் தினத்தில் சட்ட மீறல்கள் இடம்பெறவில்லை

kamal gunaratne
kamal gunaratne

மாவீரர்தினத்தை வடக்கில் அனுட்டித்ததில் எந்த சட்டமீறல்களும் நடக்கவில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறோம் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு
பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள மால்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது தேசிய பாதுகாப்பு குறைக்கப்படாது.

யாருடைய நலனுக்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. ஏழைகளின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தவும் நாங்கள் உதவியுள்ளோம். விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.