கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்

water board
water board

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் காரணமாகக் கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர்வழங்கல் இன்று காலை 9 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01, கொழும்பு 02 மற்றும் கொழும்பு 03 மற்றும் கொழும்பு 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.00 மணிமுதல் நாளை காலை 9.00 மணி வரையான 24 மணிநேரம் இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.