சிரியாவின் ஹமா பகுதிய இலக்குவைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சிரியா தெரிவித்துள்ளது. பல ஏவுகணைகளை தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைகள் சுட்டுவீழ்த்தியுள்ளன என சிரியா தெரிவித்துள்ளது.
லெபனானிற்குள ஊடுருவுவதற்கு முன்னதாக சிரியா மீது தாக்குதல் இடம்பெற்றதாக சிரியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சனா செய்தி சேவை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.