கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

kaithu

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையில் இந்த பகுதியில் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 1 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பனவற்றையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கைதானவர் குச்சவெளி மதுரங்குடா செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.