உழவியந்திரத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலி!

death child
death child

அநுராதபுரம் – மஹதிவுல்வெவ பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் சிக்கி 9 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த உழவியந்திரத்தின் பின்னால் தாயும் குறித்த குழந்தையும் அமர்ந்து சென்றுள்ளதுடன் திடீரென தாயின் கை தவறி குழந்தை கீழே விழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சில்லுக்குள் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது