நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம் – உறுப்பினர் மதுசுதன்

IMG 20201229 WA0010
IMG 20201229 WA0010

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே கு.மதுசுதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்..

நல்லூர் பிரதேச எல்லைக்குள் பராமரிப்பற்ற காணிகள் சபை உடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை சபை தவிசாளர் கெளரவ ப.மயூரன் அவர்கள் 22.01.2021 அன்று அறிவித்தல் விடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

உண்மையில் சபை கூட்டப்பட்டு பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் பேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, எந்தவித தீர்மானங்களும் எட்டாமல் எமது மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்தலானது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வறிவித்தலினால் மக்கள் அதிக சினம் கொண்டு எம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா கலப்பகுதியும்,அடைமழை காரணமாகவும் வருமானமற்ற நிலையிலேயே துப்பரவு பணிகள் இடம்பெறவில்லை எனவும் சபை ஊழியர்களால் தங்களுக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள்.

எனினும் பிரதேசத்தில் பராமரிப்பற்ற காணிகளினால் பார்தினியம், மற்றும் டெங்கு அபாயங்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகும். அதனை தடுப்பதற்கும் உரிய முறையில் பராமரிப்பதற்கும் பிரதேச சபை சட்ட ஏற்பாட்டுகளின் படி பல முறைகள் உள்ளன . எம்மிடம் அதிகாராங்கள் உள்ளன. எமது சபை மூலம் சிகப்பு எச்சரிக்கை விடுத்தல், தண்டம் அறவிடல் போன்ற செயற்பாடுகள் அல்லது நீதிமன்றதினூடான நடவடிக்கைகள் போன்றன காணப்படுகின்றன.

காணி உடமையாளர்களின் காணிகளை உரிய முறையில் பராமரிக்க பண்ணுவதற்கு எமது சபையிடம் போதிய வரம்புகளும், சக்திகளும், ஏதுக்களும் இருக்கும் போது அதை தவிசாளருக்குரிய அதிகாரத்தினை பயன்படுத்தி அமுல்படுத்தாமல் எமது தமிழ் மக்களின் காணிகளினை அரச உடைமையாக்கப்படும் என்று அறிவித்தமையானது, எமது நிலங்களை அரசுக்கு தாரை வார்க்கும் செயற்பாடாகும்.

பிரதேசத்தில் காணி விற்றல் ,வாங்கல் மூலம் சபைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது .அந்த வருமானங்களை கொண்டு பராமரிப்பற்ற காணிகளினை பராமரிக்க சில முன்மாதிரியான நடவடிக்கைகளினை நாம் எடுக்க வேண்டும்.இருக்கும் அதிகாரங்களை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் சேவையாற்றவே வேண்டுமே ஒழிய மக்கள் வரிப்பணத்தில் சபை நாடாத்திக்கொண்டு அவர்களுக்கு எதிராக நாம் செயற்படுவது சிறப்பான ஒன்றல்ல.

எனவே மக்கள் விரோத நிலைபாடுகளை எடுக்காமல் இனி சபையில் கூடி கலந்துரையாடி ஆக்கபூர்வமான இனத்திற்கு நலன் சேர்க்கும் பிரதேசத்தின் வளர்ச்சிக்குமுரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளாமல் இப்படி செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.