கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மீது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.