கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஹிக்கடுவை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்- சுகாதார அதிகாரிகள்

Pavithra.Wanniarachchi.2 1
Pavithra.Wanniarachchi.2 1

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மீது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.