பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரி மாதம் இரண்டாம் திகதிற்கு முன்னர் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
டெப் கணினி வழங்குவது குறித்து முழுமையான விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.