மட்டக்களப்பு காவல்துறைப்பிரிவின் கீழ் உள்ள வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட காவல்தறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவ தினமான இன்று குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.