பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

unnamed 1 4
unnamed 1 4

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முக்கச்சக்கர வண்டியொன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.