சுகாதார விதிமுறைகளை மீறிய 12 பேர் கைது

ajith rohana
ajith rohana

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 746 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் 2600 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.