முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குறிய நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரத்தில் குறித்த ஆலய வளாகத்தினுள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புத்தர்சிலை விகாரைக்குள் பிரதிஷ்டை செய்யப்படாது பிக்குகளின் தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.