கொழும்பில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3

நாட்டில் நேற்று கொரோனா தொற்றுறுதியான 737 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 227 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 21 பேர் புறக்கோட்டை பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 102 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 96 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது