நாட்டில் நேற்று கொரோனா தொற்றுறுதியான 737 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 227 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 21 பேர் புறக்கோட்டை பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 102 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 96 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது