ரஞ்சன் ராமநாயக்கவின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவு

z p01 Ranjan
z p01 Ranjan

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த ரஞ்சன் ராமநாயக்க பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் இருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

கொவிட்-19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.