இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

1611710971 6405898 hirunews
1611710971 6405898 hirunews

இன்று அதிகாலை 5 மணிமுதல் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகமயில் 659ஈ-போகஹவத்தை, 659சீ-பமுனுமுல்ல, 657ஏ-கொலமெதிரிய, 659பீ-கொரவல, 660-பமுனுமுல்ல, 659-அட்டலுகம கிழக்கு, 659ஈ-அட்டலுகம மேற்கு, 660ஏ-எப்பிடமுல்ல, 659டீ-கல்கெமன்டிய முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் – எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவின் மொரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.