நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மாத்தறை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
ஏனைய பகுதியில் சீரான வானிலை நிலவக்கூடும்.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.