நாட்டில் நேற்றைய தினம் 755 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் நேற்றைய தினம் 755 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 741 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

8 ஆயிரத்து 588 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.