காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

rain 23 1568876827
rain 23 1568876827

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய,வடக்கு,வடமத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கிழக்கு மாகாணத்தின் சில பாகங்களிலும், முல்லைதீவு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களின் சில பாகங்களிலும் காலை வேளையில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.