சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தைக்கு விளக்கமறியல்!

court 850x460 acf cropped 2
court 850x460 acf cropped 2

மட்டக்களப்பு தலைமையக காவற்துறை பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கைது செய்யப்பட்ட  தந்தைக்கு எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.


மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததோடு தன்னுடன் படுக்கவருமாறு அழைத்ததையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து காவற்துறையிரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது 


இதனையடுத்துகாவற்துறையினர் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.