வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று

.சத்தியமூர்த்தி 754x420 1
.சத்தியமூர்த்தி 754x420 1

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.