பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா!

virus corona ilustrasi 1
virus corona ilustrasi 1

கேகாலை வெலி மன்னாதொட, எடோருவாவ, சமகிகம பிரதேச வீடொன்றில் சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட மற்றும் குறித்த வீட்டில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பிரதேசத்தில் 9 வீடுகளை சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாண ஆளுநரின் தனிப்பட்ட செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் ஆளுநர் சுயதனிமைப்படுதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.