கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்தது!

Ena3m6gXIAQDXOv
Ena3m6gXIAQDXOv

நாட்டில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) மேலும் 882 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்தை கடந்துள்ளது.  

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,159 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை, இலங்கையில் 63,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,821 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 566 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 313 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது