இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி.மெனல்லா, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைனி ஜொரன்லி எஸ்கேடல் ஆகியோர் ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துக் கொண்டனர்.
இரு நாட்டு தூதுவர்களும் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.