ஹெரோயின் விற்பனை செய்த பெண் கைது

kaithu

ஹெரோயின்  போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹோகந்தர-போகாவத்த பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் உதவியாளர் என கூறப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபரிடம் இருந்து 106 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.