கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது!

zasudili 830x495 1
zasudili 830x495 1

முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பேணாத மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 14 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக கடந்த அக்டோபர் 30-ஆம் திகதி முதல் இதுவரையிலும் 2944 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.