வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமை புரிந்த அசங்க காஞ்சனகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதேச செயலாளராக கடமைபுரிந்த ஜானக குருநாகல் பகுதிக்கு இடமாற்றமாகி சென்ற நிலையில் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட இவர் இன்றையதினம் (02) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
மத அனுஸ்டானங்களுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.