குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலி!

1599191154 death corona 2
1599191154 death corona 2

கொழும்பு ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

11 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நியுமோனியா நிலை காரணமாக குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 4 மாதங்கள் வயதுடைய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.