கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட சுமார் 150 குழந்தைகள் இதுவரை பதிவாகியுள்ளதாகக் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 18 மாத குழந்தை ஒன்று கொரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுப்பதாக இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.