மோட்டார் சைக்கிள் இலக்கங்களை பதிவுசெய்த காவல்துறையினர்!

IMG 8237
IMG 8237

வவுனியாவில் போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்களை காவல்துறையினர் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எழுச்சிப் பேரணி வவுனியா புதிய பேருந்துநி்லையத்திற்கு முன்பாக இன்றையதினம் இரவு 8.30 மணியளவில் வருகை தந்திருந்தது.

இதன்போது பேரணிக்கு வருகைதந்து ஆதரவினை வழங்கிய பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்களை காவல்துறையினர்பதிவு செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.