விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் தேர்தல் பிரசார செலவினங்கள், கட்டுப்பணம், ஊடக விழுமியங்கள் குறித்த புதிய சீர்த்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.