அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கு கொரோனா!

big 165616 Coronavirus 1 4
big 165616 Coronavirus 1 4

அனுராதபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 11 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அலுவலக ஊழியர்கள் மற்றும் குறித்த பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்கள் 04 பேரை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்துடன், இந்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட மேலும் 06 ஆசிரியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது