வலப்பனை பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 58 வயதுடைய ஜீ.ஜீ . ரங்கபண்டாவும் அவரது வயதுடைய மனைவி பிசோ மெனிக்கேயும் அவர்களின் 17 வயதுடைய உறவுமுறை பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தம்பதியினரின் 16 வயதான மகன் இன்னமும் மீட்கப்படவில்லை.
மண்சரிவில் சிக்குண்ட ரங்க பண்டாவின் வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் குறைந்த தூரத்தில் அமையப்பெற்றுள்ள கற்குவாரியில் இடம்பெறும் வெடிப்பு செயற்பாடுகளாலேயே மணல் மேடு சரிந்துவீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மண்மேடு சரிந்து விழுவதற்கு காரணமான வலப்பனை பகுதியிலுள்ள கற்குவாரிகளின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா வலப்பனை பகுதியில் கடந்த 30ம் திகதி மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்த நிலையில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.